சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், மீனவருக்கு விளக்கமறியல்..!!
13 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் 39 வயதான மீனவர் ஒருவரை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனசவிபுர எனும் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வல்லுறவுக்குட்படுத்தப்
இந்நிலையில் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயங்களில் இச்சந்தேக நபர் இச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதமே முதற்தடவையாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்று வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தனது சிறிய தந்தையினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து தாயுடன் சென்ற சிறுமி சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கல்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating