சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், மீனவருக்கு விளக்கமறியல்..!!

Read Time:2 Minute, 43 Second

images13 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் 39 வய­தான மீனவர் ஒரு­வரை இம்­மாதம் 29ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் நீதி­மன்றம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்­ளது.

புத்தளம் மாவட்டம் கற்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஜன­ச­வி­புர எனும் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக கல்­பிட்டி பொலிசார் தெரி­வித்­துள்ளனர்.

வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட சிறு­மியின் தந்தை அவ­ளது தாயை விட்டுப் பிரிந்து சென்­றுள்ளார். இதன் பின்னர் சிறு­மியின் தாய் வேறொரு நப­ருடன் இணைந்து குடும்பம் நடாத்தி வந்­துள்ளார்.

இந்­நி­லையில் வீட்டில் ஒரு­வரும் இல்­லாத சம­யங்­களில் இச்­சந்­தேக நபர் இச்­சி­று­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி வந்­துள்ளார்.

கடந்த ஒக்­டோபர் மாதமே முதற்­த­ட­வை­யாக இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­துடன் அதனைத் தொடர்ந்து தொடர்ச்­சி­யாக இச்­சம்­பவம் இடம்­பெற்று வந்­துள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­துள்ளனர்.

இவ்­வாறு தனது சிறிய தந்­தை­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட இச்­செ­யலைப் பொறுத்துக் கொள்ள முடி­யாத சிறுமி இதுபற்றி தனது தாயிடம் தெரி­வித்­ததைத் தொடர்ந்து தாயுடன் சென்ற சிறுமி சம்­பவம் தொடர்பில் கல்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேகநபர் கைது செய்­யப்­பட்டு நேற்று நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே அவ­ருக்கு இந்த விளக்­க­ம­றியல் உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட சிறுமி வைத்­திய சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கல்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணாகப் பிறந்த இளைஞனுக்கும் ஆணாகப் பிறந்த யுவதிக்கும் காதல்..!!
Next post பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்…! (படங்கள் இணைப்பு)