68 இலங்கையர்களுடன் கிறிஸ்மஸ்தீவில் மற்றுமொரு படகு தஞ்சம்..!!
Read Time:1 Minute, 25 Second
அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் 68 பேருடன் வந்த சட்டவிரோத படகொன்றினை அந்நாட்டின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழன் இரவு கைப்பற்றியுள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் படகிலிருக்கும் அனைவரும் இலங்கையர்க ளென்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அதன் பணிப்பாளர் சியுநைட் தெரிவித்துள்ளார். கைதாகியுள்ள 68 புகலிடக் கோரிக்கையாளர்களும் மருத்துவ சோதனைகளுக்காக கிறிஸ்மஸ்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் முறையான பரிசீல னையை தொடர்ந்து பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுவதுடன் ஏனையவர்கள் தமது தாய்நாட்டிற்கே திருப்பியனுப்பப்படு வரெனவும் அவர் நேற்று கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்தார். இப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Average Rating