குடாநாட்டில் ‘ மீற்றர் வட்டி’ கொடுமையால் 22பேர் தற்கொலை..!!
யாழ். குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துச் செல்வதினால் பல்வேறு முறைப்பாடுகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிகரித்த மீற்றர் வட்டியால் நாளாந்தம் யாழ். மக்கள், வர்த்தகர்கள் பெரும் பாதிப்படைந்து வருவது மட்டுமல்ரலாது இதுவரை யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக் கொடுமையினால் 22 பேர் தற்கொலை செய்துள்ளார்க்ள என யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே எதற்கும் ஒரு வரையறை உள்ளபோது இந்த மீற்றர் வட்டிக்கு ஏன் ஒரு வரையறை இல்லாமல் போனது. இதனால் மக்கள் தமது வீடுவாசல்களையும், நகைகளையும், வாகனங்களையும், கடைகளையும், வட்டிக்காரர்களிடம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வட்டி தொழிலாளர்களுக்குப் பண முதலைகளுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உள்ளத்தை மக்கள் அறிந்ததே எனவே மீற்றர் வட்டிக்கு கொடுப்பவர்களின் கவனத்திற்கு ஒன்றை கொண்டு வர விரும்புகின்றோம்.
உடனடியாக யாழ். சமூகத்தின் நன்மை கருதி மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் ஒரு மனிதாபிமான முறையில் வட்டிக்கு வேண்டுமானால் கொடுத்துக் கொண்டு வரையான அதிகரித்த வட்டியை உடன் நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating