காதலியை கர்ப்பமாக்கி இரண்டரை கோடி ரூபா நகையும் 10 இலட்சம் ரூபா பணமும் மோசடி..!!
திருமணம் செய்து நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காதலியிடமிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்களையும் பத்து இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணத்தையும் மோசடி செய்த குற்றத்தின்பேரில் விளக்கமறியலில் இருக்கும் ஒரு சந்தேகநபரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமறு கொழும்பு நீதிமன்ற நீதிவான் திவின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கிரிசான் ரன்மல் பீரிஸ் என்ற இந்நபர் மொரட்டுவ பிரசேதத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரால் ஊழல் மோசடி பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் முறைப்பாட்டைச் செய்த யுவதியும் காதலர்கள் எனவும் இந்த யுவதியை 12 வயதில் இருந்து சந்தேகநபர் காதலித்து வந்துள்ளதாகவும் தற்போது யுவதிக்கு 25 வயது எனவும் அவர் சந்தேகநபரால் கர்ப்பமாக்கப்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊழல் மோசடி அதிகாரி ஒருவர் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
Average Rating