பிரிட்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த ஏற்பாடு..!!
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்களையும் இந்தியர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் உள்துறை அலுவலக குடிவரவு அமுலாக்க அதிகாரிகள் மற்றும் ஹள் நொட்டிங்காம் பகுதிப் பொலிஸாரின் உதவியுடன் இவர்கள் கைதாகியுள்ளனர்.
22, 23 மற்றும் 27 வயதுடைய இலங்கை இளைஞர்கள் மூவர் விசா முடிவடைந்த நிலையில் கடைகளில் சட்டவிரோதமாக வேலைசெய்து வந்துள்ளனர்.
இதன்போதே குடிவரவு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
விசா இன்றி தங்கியிருந்து சட்டவிரோதமாக வேலை செய்த மூவரையும் உடன் நாடு கடத்த வேண்டும் எனவும் குடிவரவு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த மூவருடன் கைதான 33 வயதுடைய இந்தியர் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனில் விசா இன்றி சட்டவிரோதமாக வேலை செய்வோரைக் கைது செய்தால் அவர்களுக்கு 20000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படுமென அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விசா இல்லாதோரை வேலைக்கு அமர்த்தியிருப்பின் அலுவலகக் கடை உரிமையாளரிடம் குடிவரவு அதிகாரிகளினால் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் பிரிட்டிஷ் தூதரகம் அறிவித்துள்ளது.
Average Rating