பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 48பேர் பலி..!!

Read Time:2 Minute, 0 Second

1cb987eb-033b-4a3c-ba65-9a5b703033fa_S_secvpf.gifபாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லை பிரிவில் பக்துன்கவா என்ற மலை மாகாணம் உள்ளது. அங்குள்ள குர்ரம் ஏஜென்சி பகுதியில் பிராசினார் நகரில் நேற்று இரட்டை தற்கொலை தாக்குதல் நடந்துள்ளது.

நேற்றுமாலை இப்தார் நோன்பையொட்டி பொருட்கள் வாங்க அங்குள்ள பஜாரில் சுமார் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டன. மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினார்கள். இதற்கிடையே அடுத்த ஒரு நிமிடத்தில் பஜாரின் மற்றொரு பகுதியில் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களில் 25 பேர் அதே இடத்தில் பலியாகினர். 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பலனளிக்காமல் மேலும் பலர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலக்கு பாகிஸ்தான் தலிபான்கள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஷியா பிரிவினரை குறி வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு..!!
Next post அதிர்ஷ்டவசமாக திமிங்கிலங்களிடமிருந்து உயிர் தப்பிய மனிதர்கள் (VIDEO)