நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்தவர்கள் கைது..!!

Read Time:3 Minute, 8 Second

imagesயாழ். குடா­நாட்டில் மூன்று வௌ;­வேறு பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மி­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்படுத்­தி­யுள்­ளனர் என காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.எம். ஏக்­க­நா­யக்க தெரி­வித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்துள்ளார்.

இது விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், யாழ்ப்­பா­ணத்தில் மூன்று பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ளனர்.

கோப்பாய், உரும்­பிராய் கிழக்குப் பகு­தியில் கடந்த 18 ஆம் திகதி 15 வயதுச் சிறு­மியைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அதே இடத்தைச் சேர்ந்த 25 வய­து­டைய நப­ரொ­ருவர் மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செயது யாழ். நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

யாழ். நீதிவான் சந்­தேக நபரை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதே­வேளை, அச்­சு­வேலிப் பகு­தியில் 8 வய­து­டைய சிறு­மி­யொ­ரு­வரை 19 வய­து­ இளைஞன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்தார் எனும் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் குறித்த சந்­தேக நபரை அச்­சு­வேலி பொலிஸார் கைது செய்து சாவ­கச்­சேரி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அதே­வேளை, காங்­கே­சன்­துறை பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்கும் 13 வய­தையும் 14 வய­தையும் உடைய இரண்டு சிறு­மிகள் யாழ் கந்­தர்­ம­டத்தை சேர்ந்த 36 வய­து­டைய ஆசி­ரியர் ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்­தார் என காங்­கே­சன்­துறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து சந்­தேகநபர் கைது செய்­யப்­பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தியை கர்ப்பமாகிய இளைஞன்: பொலிஸ் அழைப்பாணைக்கு பயந்து தற்கொலை..!!
Next post இங்கிலாந்தில் உருவாக்கப்படும் பூங்காப் பாலம்..!!