பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய ஐவர் யாழில் கைது..!
யாழ்ப்பாணம் – கோப்பாய் கலாசாலை வீதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மதுபோதையில் வேன் ஒன்றில் பயணித்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் அடங்கலாக இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்தி நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் ஏற்கனவே குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்த ஒருவரும் அடங்குவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பயணித்த வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Average Rating