யாழில் 34 இந்திய மீனவர்கள் கைது..!!

Read Time:1 Minute, 16 Second

download (3)யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 34 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று இரவு கைதுசெய்த இந்த 34  இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை பொலிஸாரிடம், கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக  வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத் தலைவர்  வை.அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த 34  இந்திய மீனவர்களும் 5 ரோலர் படகுகளில் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 5 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த 34  இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை..!
Next post சிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..!