சிறு­மியை கடத்தித் துஷ்­பி­ர­யோ­கம் செய்த விடயமாக இளைஞர் கைது..!

Read Time:3 Minute, 27 Second
images (4)12 வயது சிறுமி ஒரு­வரை அவ­ளது பெற்­றோரின் பாது­காப்­பி­லி­ருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் இளைஞர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக மார­வில பொலிசார் தெரி­வித்­துள்ளனர்.

கொஸ்­வத்தை மீக­ஹ­வெல எனும் பிர­தேசத்தைச் சேர்ந்த சிறு­மியே இவ்­வாறு கடத்திச் செல்­லப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­வ­ராவார்.

கடந்த 8ஆம் திகதி குறித்த சிறுமி தனது சகோ­தரி மற்றும் தாயுடன் மார­வில வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றி­ருந்த வேளை வைத்­தி­ய­சாலை உண­வ­கத்­திற்குச் செல்­வதாகக் கூறி வெளி­யே­றி­யுள்ள அச்­சி­றுமி மீண்டும் திரும்பி வர­வில்லை எனவும், இது தொடர்பில் விசா­ரித்­ததில் தனது மகள் காதல் தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்த இளை­ஞ­னுடன் சென்­றி­ருப்­ப­தாக அறிந்து கொண்­ட­தாக சிறு­மியின் தாய் சம்­பவம் தொடர்பில் மார­வில பொலிஸ் நிலை­யத்தில் அன்­றைய தினமே முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்­நி­லையில் குறித்த சிறுமி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் வீட்­டுக்கு வந்­துள்ளார்.
தான் மீக­ஹ­வெல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தும்பு ஆலையில் பணி­யாற்றும் இளைஞர் ஒரு­வ­ருடன் சென்­ற­தா­கவும், தாம் இரு­வரும் பொலன்­ன­றுவை மானம்­பிட்டி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்கி கணவன் மனை­வி­யாக வாழ்ந்­த­தா­கவும் தாயிடம் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சிறு­மியின் தாய் தனது மகள் கடத்­தப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யத்­தினை மார­வில பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­டுள்­ள­துடன் அம்­மு­றைப்­பாட்டின் அடிப்­ப­டையில் சந்­தேக நப­ரான இளைஞன் மார­வில பொலி­சாரால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்தச் சிறுவர் துஷ்­பி­ர­யோகச் சம்­பவம் பொலன்­ன­றுவை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளதால் இது தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொருட்டு சந்­தேக நபரை பொலன்­ன­றுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாரவில பொலிசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்­பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் 34 இந்திய மீனவர்கள் கைது..!!
Next post உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!