உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!
2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் தன்னை சித்திபெற வைக் கும்படி கோரி 15,000 ரூபாவுக்கான நோட்டுகளை தனது விடைத்தாளுடன் இணைத்து அனுப்பியிருந் ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
தமிழ்மொழி மூலம் பரீட்சைக் குத் தோற்றிய மாணவர் தமது சிரமங்களை சுருக்கமாக எழுதிய கடி தத்துடன் மூன்று 5,000 ரூபா நோட்டுகளை இணைத்திருந்ததாக
பத்தரமுல்லையிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
இது போன்ற முறையற்ற வழிகளை பின்பற்றுவது பரீட்சை சட்ட திட்டங்களை மீறுவதாகும் எனவும் இது போன்ற பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு இது குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த மாணவர் விடைத்தாளுடன் இணைத்திருந்த 15,000ரூபா அரச கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.
விடைத்தாளுடன் தனது துயரங்களை எழுதுதல், பண நோட்டுகளை இணைத்தல், தொலைபேசி இலக்கங்களை எழுதுதல் போன்ற செயல்களால் எதுவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையெனவும் இது காலத்தையும் பணத்தையும் விரயமாக்கும் செயலாகவே அமையுமென்றும் அவர் தெரிவித்தார்.”
Average Rating