இங்கிலாந்தில் காரை சுவற்றில் மோதி 2 மகன்களை கொன்ற இந்தியர்..!!

Read Time:2 Minute, 44 Second

download (19)இங்கிலாந்தின் அயர்லாந்தில் கார்லோ பகுதியில் உள்ள பால்லின் கில்வென் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் சாபா (43). இவர் இங்கிலாந்து வாழ் இந்தியர். இவரது மனைவி காத்லீன் நர்சு ஆக பணிபுரிகிறார். இவர்களுக்கு இயோகன் (10), ருயரி (5) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29–ந்தேதி (திங்கட்கிழமை) சஞ்சீவ்சாபா தனது மகன்களை காரில் ஏற்றிக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்ப வில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே, அவர்களை போலீசார் தேடி வந்தனர்., இதற்கிடையே பால்லின் கெல்லினில் இருந்து 200 மைல் தொலைவில் உள்ள மாயோ பகுதியில் வெஸ்ட் போர்ட் என்ற இடத்தில் இவர்கள் சென்ற கார் நொறுங்கிய நிலையில் கிடந்தது.

காரின் பின்புறம் பொருட்கள் வைக்கும் இடத்தில் சாபாவின் 2 மகன்களும் பிணமாக கிடந்தனர். நொறுங்கிய காருக்குள் சஞ்சீவ் சாபா கழுத்தில் ‘சூ’வுக்கு கட்டும் கயிற்றால் இறுக்கிய நிலையில் மயங்கி கிடந்தார். அதை தொடர்ந்து மகன்கள் பிணங்களை கைப்பற்றிய போலீசார் சஞ்சீவ் சாபாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சீவ் சாபா தான் குடியிருக்கும் கார்லோ பகுதியில் 50 ஆயிரம் யூரோ கையாடல் செய்ததாகவும், அது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது மகன்களை காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தாங்கள் 3 பேரும் இறக்கும் நோக்கத்தில் காரை சுவற்றில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

அதில் மகன்கள் இறந்து விட்டனர். ஆனால் சாபா உயிர் போகவில்லை. எனவே ‘சூ’வின் கயிற்றால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து சஞ்சீவ் சாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘டார்லிங்’ என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் வெளியேற்றம்..!!
Next post உடரட்ட மெனிக்கேவுடன் மோதி ஒருவர் தற்கொலை..!!