தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு அச்சுறுத்தல்..!!

Read Time:1 Minute, 59 Second

download (20)தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் வகையில் ஆரியாலை, புங்கன்குளம் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாநகர உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தின் வீட்டிற்கு சைக்கிளில் வந்த மூன்று புலனாய்வாளர்கள் நேற்று படம்பிடித்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் இவர் தொடர்பாக அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், இவர் முன்னாள் போராளியா?, வன்னியில் வசித்தவரா?, இவரின் குடும்ப விபரங்கள் அவர் எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறார்,

எந்த நேரம் வீட்டுக்கு வருவார் என்றும் மாநகர சபை உறுப்பினராக இப்பகுதி மக்கள் வாக்களித்திருந்தார்களா போன்ற பல்வேறு விபரங்களை அவர் கேட்டறிந்து கொண்டதாக வேட்பாளர் விந்தன் தெரிவித்துள்ளார்

இந்த அச்சுறுத்தல் தொடர்வில் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு மாவை கேட்டுள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி..!!
Next post ‘டார்லிங்’ என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் வெளியேற்றம்..!!