500 வருடங்களுக்கு முன் போதையூட்டப்பட்டு குளிரால் இறந்த சிறுமிகளின் ‘மம்மி’கள்..!!
தென் அமெரிக்காவில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 500 வருடங்கள் பழைமையான 3 ‘மம்மி’கள் போதைப்பொருட்கள் கொடுக்கப்பட்டு குளிரில் விட்டு உறையவைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்காவைச் சேர்ந்த 3 சிறுமிகளே இவ்வாறு 500 வருடங்களுக்கு முன்னர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 3 சிறுமிகளின் மம்மிகள் ஆர்ஜென்டீனாவிலுள்ள மலை ஒன்றிலிருந்து கடந்த 1999ஆம் ஆண்டு மீட்கப்பட்டவை. இன்கா பேரரசினால் கபகொசா எனும் மத சடங்கு ஒன்று பின்பற்றுள்ளது. இச்சடங்கின் மூலம் மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பழக்கம் அங்கு காணப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாகவே இச்சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது. இதில் 13 வயதான சிறுமியொருவரின் உடல் 500 வருடங்கள் பழைமையானது என நம்ப முடியாதளவிற்கு அதிசயிக்கத்தக்க வகையில் இதுவரையில் பாதுகாப்பாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இச்சிறுமியின் மரணம் எவ்வாறு நடந்துள்ளது என அச்சிறுமியின் முடியின் மீது மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இச்சிறுமியின் பெயர் லுலைலகோ மெய்டின் எனக் கூறப்படுகின்ற போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லையாம். மீட்கப்பட்ட சிறுமிகளில் 13 வயதான இச்சிறுமியே வயதானவர்.
மலையின் மீது குளிரை தாங்குவதற்காக குறித்த சிறுமிகளுக்கு போதை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுவே விரைவாக அவர்களை உயிரிழக்கச் செய்துள்ளது என இரசாயனம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பிராட்போட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்ரூ வில்சன் கூறுகையில், குறித்த சிறுமிகளை 12 மாதங்களுக்கு முன்னர் தெரிவு செய்து அவர்களது மத சடங்கிற்கு பயன்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடர்ச்சியாக அதிகளவான கொக்கெய்ன் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating