சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு..!!
அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் கோல்ட் ஸ்டார் தாக்குதல் திட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 4 சீக்கியர்களும் குற்றவாளி என்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு தனது மனைவியுடன் லண்டன் போயிருந்தபோது தெருவில் வைத்து தாக்கப்பட்டார் பிரார். அவரது கழுத்தில் கத்தியால் குத்தி காயப்படுத்தினர் குற்றவாளிகள்.இந்த தாக்குதல் வழக்கில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் தற்போது நான்கு பேரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் ஆபரேன் ப்ளூஸ்டார் என்ற தாக்குதலை இராணுவம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Average Rating