சீக்கிய மத குரு இலங்கைக்கு விஜயம்..!!
Read Time:1 Minute, 16 Second
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீக்கிய மதத்தின் முதல் குரு என கூறப்படும் குருநானக் தேவ், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்;பெற்றுள்ளன..
பஞ்சாப்பை தளமாக கொண்ட வரலாற்று ஆய்வாளரான அசோக் குமார் கைந்த் என்பவர் இது தொடர்பிலான ஆதாரங்களை இலங்கையில் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான 10 கல்வெட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளன. இவை தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநானக் தேவ், 1511ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு விஜயம் செய்ததாக இந்த ஆதாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவர் தமது விஜயத்தின் போது இலங்கையில் மன்னராக இருந்த ஆறாம் விக்ரமபாகுவையும் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating