உடலில் செதில்கள் கொண்ட சிறுவன்..!!
சீன சிறுவனொருவன் மரபணு கோளாறினால் அரியவகையான நோய்க்கு ஆளாகியுள்ளான். சீனாவின் வென்லிங்க் எனுமிடத் தில் பிறந்த பேன் ஷியான்ஹேங் என்ற சிறுவனே அரிய வகை பரம்பரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இச்தையோஸிஸ் என அறியப்பட்டுள்ள இந்நோயினால் உடல் முழுவதும் உருவாகியுள்ள அரிப்பை ஏற்படுத்தும் செதில்களால் ஏற்படும் வலி மற்றும் அரிப்பினால் இச்சிறுவன் உறங்கமுடியாமலும் அவதியுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
சாதாரணமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் வறட்சியாக காணப்படும். ஆனால் இச்சிறுவனுக்கு அதிகளவில் பாதி ப்பை ஏற்படுத்தியுள்ள அரிப்புச் செதில்கள் கண், காது என அனைத்து இடங்களிலும் பரவி அவனது கை, கால்களில் அசைவையும் மட்டுப்படுத்தியுள்ளது.
பேனின் தாய் ஏனைய சிறுவர்கள் போன்று தனது குழந்தையும் பாடசாலை செல்ல வேண்டும் என ஆசைப்படுகின்றார்.
இதேவேளை உடல் முழுவதும் செதில் காணப்படுவதானால் இச்சிறு வனை அயலவர்கள் மீன் சிறுவன் அழைக்கும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிறுவயதில் கைவிடப்பட்ட மின் அன் என்ற 18 வயதான இளைஞனொருவரைப் பற்றி சனல் 5 தொலைக்காட்சி ஆவணப்படமொன்றினை வெளியிட்டது.
மின் அன்னை அவரது 3 வயதி லிருந்து பிரண்டா என்ற பெண்மணி பராமரிப்பதுடன் நிதியும் சேகரித்து வருகிறார்.
Average Rating