திடீர் வயிற்றுப்போக்கு- ஓடும் விமானத்தில் 30 பேர் வாந்தி எடுத்து அவதி….!!

Read Time:2 Minute, 26 Second

download (1)சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

.இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர்.குவான்டாஸ் விமானம் குவான்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்துள்ளனர்.

திடீர் வயிற்றுப் போக்குசான்டியாகோவிலிருந்து கிளம்பிய விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. பயண நேரம் 14 மணி நேரமாகும்.சிட்னியை நெருங்கியபோது வயிற்றுப் போக்குவிமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானமே பரபரப்பானது.தரையிறங்கியதும் உடனடி சிகிச்சைஇதையடுத்து சிட்னி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. டாக்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். விமானம் தரையிறங்கியதும் அத்தனை பேரையும் மருத்துவர்கள் அழைத்துச் சென்று அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.

ஏறுவதற்கு முன்பே சாப்பாட்டில் பிரச்சினைஇந்த 30 பேரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எங்கோ வெளியில் சாப்பிட்டுள்ளனர். அந்த சாப்பாட்டில்தான் பிரச்சினை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் வாந்தி, வயிற்றுப் போக்கால் விமானத்திலும், விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் செல்போன் வெடித்­து வீடு சேதம்..!!
Next post தங்க முலாம், வைர கற்களால் இழைக்கபட்ட பைக்..!!