கப்பலை கடத்தி 4 பேர் சுட்டுக்கொலை: 3 சோமாலிய கொள்ளையருக்கு ஆயுள் தண்டனை..!!
அமெரிக்காவை சேர்ந்த 19 பேர் ஒரு உல்லாச படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வடக்கு ஆப்பிரிக்க கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
இவர்களை விடுவிக்க பலகோடி ரூபாய் பிணைத் தொகை கேட்டு வலியுறுத்தினர். அதை தொடர்ந்து அவர்களுடன் அமெரிக்க கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடத்தி வைத்திருந்த 4 அமெரிக்கர்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் கடந்த 2011–ம் ஆண்டில் நடந்தது.
அதை தொடர்ந்து இவர்களை சுட்டுக்கொன்ற 3 சோமாலியா கடற்கொள்ளையர்கள் அகமது மூசே சலாத், அபுகர் ஓஸ்மான் பேயல், ஷானி நூரானி ஷேக் அப்ரஸ் ஆகிய 3 பேரை அமெரிக்க கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது இவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் இவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating