பாடசாலை வேனில் மாணவிமீது பாலியல் வல்லுறவு..!!

Read Time:1 Minute, 55 Second

download (3)பாட­சாலை பிள்­ளை­களை ஏற்றிச் செல்லும் வாக­னத்தில் வைத்து பாட­சாலை மாண­வி­யொ­ருத்­தியை பலாத்­கா­ர­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய வாகன சார­தியை தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் விசேட பொலிஸ் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

கொழும்பு, அவி­சா­வளை பிர­தே­சத்தில் இச்சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. அங்­குள்ள பாட­சா­லை­யொன்­றுக்கு பிள்­ளை­களை ஏற்றிச் செல்லும் வாகனம் பாட­சாலை அருகே வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்தபோது இவ்­வாறு சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­துக்­கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு பிரி­வுக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாட்­டின்­படி சிறுமியை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய சாரதிக்கு சிறு­மியின் வயதில் அவ­ருக்கு ஒரு புதல்வி இருப்­ப­தா­கவும் மனைவி வெளி­நா­டொன்றில் பணி­யாற்­று­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

சம்­ப­வத்­துக்கு மறு­தினம் பாட­சாலை செல்ல மறுப்பு தெரி­வித்த இச் சிறு­மியை தாய் விசா­ரித்த போது விப­ரங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து தாய் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கப்பலை கடத்தி 4 பேர் சுட்டுக்கொலை: 3 சோமாலிய கொள்ளையருக்கு ஆயுள் தண்டனை..!!
Next post சிரிய ஆயுத கிடங்கு மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல் – 40 பேர் பலி…!!