லிந்துலை – மெராயாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 8 Second
நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெயாரா – ஹென்போல்ட் தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இன்று காலையிலேயே தெரியவந்துள்ளது.
ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்யப்பட்டு வரும் பகுதியிலேயே குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய வடிவேல் சிவகுமார் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating