பாண்டிருப்பில் வீட்டிற்குள் புகுந்த ஐந்தடி முதலை..!!

Read Time:1 Minute, 33 Second

Crocodile05640மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் நேற்று இரவு 08.30மணயளவில் சுமார் 5அடி நீளமான முதலை குளமொன்றிலிருந்து வீடொன்றிக்குள் புகுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் ஒருவித பீதியுடனும் அச்சத்துடனும் காணப்பட்டிருந்தனர்;.

பாண்டிருப்பு பிரதான வீதியில் வீடுகள் அமைந்துள்ள பகுதிக்கு பின்னால் அமைந்துள்ள குளமொன்றிலிருந்தே குறித்த முதலை வெளியாகி வீட்டிற்குள் உட்புகுந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் மக்கள் கூட்டமாக ஒன்று திரண்டதுடன் அச்ச நிலையும் பீதி நிலையும் அப்பகுதியில் காணப்பட்டது.

குறித்த விடயம் தொர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதற்கு முன்னர் இவ்வாறு முதலைகள் வரவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலையை பார்வையிட கல்முனை, மருதமுனைப் பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் வெடிப்பு சம்பவம்..!!
Next post யாழில் அஜித்திற்காக தற்கொலை செய்த 17 வயது மாணவி..!!