மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!
Read Time:50 Second
கண்டி மாவட்டம் கம்பொல, அம்புலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
அதிக மழை காரணமாக நேற்று குறித்த பிரதேசத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஆண்கள் இருவரும் பெண்கள் மூவரும் காயமடைந்து சிகிச்சைகளுக்காக கம்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 52 வயதான பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் கம்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating