மட்டக்களப்பில் சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்..!!
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றுமாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன
இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கரடியனாறு பிரதேசத்தில் 10 வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவிலும், மரப்பாலம் பிரதேசத்தில் 5 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும், கித்துல் பிரதேசத்தில் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமைடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பனிப்புரையின் பேரில் குறித்த பகுதிகளுக்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் சேதமதிப்பீடுகளையும் மேற்கொண்டனர்.
மேலும் சேத விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கொழும்பு மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
Average Rating