5 குழந்தைகளை ஒரே சூலில் பெற்ற தாய்க்கு எஞ்சியிருப்பது ஒரேயொரு குழந்தையே மீதம்..!!
Read Time:58 Second
மடவளை முஸ்லிம் பெண்ணுக்கு ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையும் உயிரிந்துள்ளது.
மடவளை சிரிமல்வத்தை வீதியில் வசித்து வரும் பெண்ணொருவருக்கே கண்டி வைத்தியசாலையில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி ஒரு குழந்தையும், 9ஆம் திகதி மற்றொரு குழந்தையும் 22ஆம் திகதி இன்னொரு குழந்தையும் மரணித்தது.
மீதியாக இருந்த இரு குழந்தைகளுள் ஒன்று பேராதனை வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளது.
தற்போது ஒரே ஒரு ஆண்குழந்தை மட்டுமே எஞ்சியுள்ளது.
Average Rating