திருமலை மீனவர் மீதான தாக்குதல், சந்தேகநபர் ஒருவர் காணப்பட்டார்..!!
திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலரை தாக்கி மீன்கள் கொள்ளையிட்டுச் சென்ற குழுவுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிண்ணியா உப்பாறு பகுதிலிருந்து இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் மீதே நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த மூன்று மீனவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆறு படகுகளில் வந்த சுமார் 24 பேர் கொண்ட குழுவினர் இவர்களை தாக்கி 150 கிலோகிராமிற்கும் அதிகமான மீனை கொள்ளையிட்டுச் சென்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்றிற்கு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating