மெட்ராஸ் கபேக்கு இலங்கை முதலிடவில்லை..!!
இலங்கையின் மோதல் சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் கெபே திரைப்படத்தை தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முதலிடவில்லை என்று அதன் பிரதான நடிகர் ஜோன் ஏப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக இந்தியாவில் ஒருசில தரப்பினர் பரப்பிவரும் வதந்திகளில் உண்மையில்லை என்று அவர் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இதற்காக தமது உற்பத்திகள் அன்றி வேறு யாரும் ரகசியமான முறையில் முதலிடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெட்ராஸ் கெபே திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் இடம்பெற்றது.
இதுதவிர, அந்ததிரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இருந்தபோதும், ஜோன் ஏப்ரஹாம் மற்றும் நாகீஸ் ஆகியோர் நடித்த மெட்ராஸ் கெபே திரைப்படத்தின் தமிழ் பதிப்பும் எதிர்வரும் 23 ஆம் திகதி தமிழ் நாட்டில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating