மத்திய அரசிற்கு ஆதரவு இருக்காது – தி.மு.க..!!
Read Time:1 Minute, 13 Second
பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற தமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்டும் இல்லையேல் மத்திய அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்ளப்போவதில்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் எச்சரித்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பேச்சாளர் டிகேஎஸ் இளங்கோவன் இதனை தெரிவித்துள்ளார்
ஏற்கனவே நட்பு நாடு என்ற வகையில் இலங்கையை கருதக்கூடாது என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் மத்திய அரசாங்கம் அதனை நிராகரித்தது
இந்தநிலையிலேயே திராவிட முன்னேற்றக்கழகம் தமது கோரிக்கையை மத்திய அரசாங்கத்தின் முன்னால் வைத்துள்ளது என்று தெ இக்கோனோமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது
Average Rating