அல்ஜீரியாவில் கட்டாய நோன்புக்கு எதிராக மதிய உணவு உட்கொண்டு ஆர்ப்பாட்டம்..!!
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் கட்டாய நோன்பிற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக சுமார் 300 பேர் ஒன்றிணைந்து பகிரங்க மதிய உணவு உட்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜயர்ஸிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலுள்ள டிஷி ஒளஸொவ் எனுமிடத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
வட ஆபிரிக்காவில் இவ்வாறு நோன்புக்கு எதிராக செயற்படுவது மிக அரிதான ஒரு செயற்பாடாகும். ஏனெனில் அங்கு சட்ட ரீதியாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கப்பட வேண்டும்.
பேர்பர் குழுவைச் சேர்ந்த கெபைலியா பிரதேசத்திலுள்ள 3 இளைஞர்கள் வீட்டுக்கு வெளியில் நோன்பு நேரத்தில் உணவு உட்கொண்டுள்ளனர்.
இதனால் இவர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்தே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையை’ பேர்பர் எனும் ஒரு சிறுபாண்மையின குழுவே நடத்தியுள்ளது. இதில் உள்நாட்டு முஸ்லிம்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை குறித்து கெபைலியா பிரதேச சுயாட்சி இயக்க தலைவர் பௌயசிஸ் அயிட் செபிப் கூறுகையில், ‘தமது நம்பிக்கையின் படி நோன்பு நோற்காத பிரஜைகள் மீது அடக்குமுறை மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எமது எதிர்ப்பினைக் காட்டுவதற்கே நாம் இங்கு கூடியுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இதே பிரதேசத்திலுள்ள நோன்பு நோற்காதவர்களை இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் எனக் கூறி தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Average Rating