இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு..!!
இயேசு கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் முறையற்ற விதத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக கென்யாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கென்யாவின் நீதிமன்றங்களின் அமைப்பின் முன்னாள் பேச்சாளரான டோலா இன்டிடிஸ் என்பவரே இவ்வாறு வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளதுடன் முறைப்பாடொன்றையும் செய்துள்ளார்.
இத்தாலிய குடியரசு, இஸ்ரேல் மற்றும் பலருக்கு எதிராக அவர் வழக்குத் தொடரப்பபோவதாக அறிவித்துள்ளார்.
‘2000 வருடங்களுக்கு பல அதிசயங்களை நிகழ்திய கடவுளின் மகன் இயேசுவுக்கு சட்டத்திற்கு புறம்பாக சித்திரவதைகுட்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடவுளுக்கு எதிராக குற்றம் புரிவதாக குற்றம் சாட்டப்பட்டு யூதர்களினால் கைதுசெய்யப்பட்ட இயேசு குற்றமற்றவர் என ரோமன் ஆளுநர் பொன்டியஸ் பிலாத்து கூறிய பின்பும் இயேசுவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது’ என டோலா இன்டிடிஸ் தெரிவித்துள்ளார்.
‘என்ன குற்றத்திற்கான இயேசுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? ‘ எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்டத்தை நிலைநாட்டாது ரோமன் நீதிமன்றம் தவறிழைத்துள்ளது. மேலும் அங்கு மனித உரிமையும் மீறப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
இதனால் முறையற்ற விதத்தில் தண்டனை வழங்கிய இத்தாலிய குடியரசு மற்றும் இஸ்ரேல் மற்றும் பலருக்கு எதிராக வழக்குத்தொடுக்க முயற்சிக்கின்றார் சட்டத்தரணி இன்டிடிஸ்.
பிரெஞ்சு வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க்கை ஆங்கிலேயர்கள் விசாரணை நடத்தியமை தண்டனை வழங்கியமை முறையற்றது என பின்னர் கண்டறியப்பட்டதைப் போல் இயேசு கிறிஸ்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் முறையற்றதாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென லோடஸ் இன்டிடிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்டிடிஸுக்கு வெற்றி கிடைக்காது ஏன கருதப்படுகிறது. ஏனெனில் சர்வதேச நீதிமன்றம் நாடுகளிடையேயான பிணக்குகள் தொடர்பிலான சட்டவரம்புகளையே கொண்டுள்ளது. எனவே இவ்வழக்கினை சர்வதேச நீதிமன்றம் ஏற்காது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவ்வழக்கானது நாடொன்றினால் தாக்கல் செய்யப்படாததால் இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்படாது எனன கொலம்பிய சட்டக் கல்லூரியின் பேராசிரியர் அந்தியா ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
Average Rating