தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது..!!
Read Time:1 Minute, 5 Second
தெற்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளிடம் ஆயுதங்களைக் கொள்வைனவு செய்து, தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்றின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
11கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 10 பாதாள உலகக் குழு உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு சென்று இந்தியா ஊடாக நாடு திரும்பிய பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரை பயங்கரவாத்த் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து விசாரணை செய்தபோது இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
Average Rating