15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைது..!!

Read Time:1 Minute, 51 Second

images

கம்­பு­று­பிட்­டிய பொலிஸ் பிர­தே­சத்தில் வசிக்கும் 15 வய­தான சிறுமி யை அவ­ரது மூத்த சகோ­த­ரியின் கணவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கிடைத்த முறைப்­பாட்டை அடுத்து அவர் கம்­பு­றுப்­பிட்டி  பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

இந்த சிறுமி தமது மூத்த சகோ­த­ரியின் வீட்டில் இருந்­துள்ளார்.  இந்த நபர் தமது மனை­வியை அறை­யொன்­றுக்குள் அச்­சு­றுத்தி அடைத்து வைத்­து­விட்டு 15 வயது யுவ­தியை வீடுக்­க­ரு­கி­லுள்ள மாஸ்­முல்ல காட்­டுப்­ப­கு­திக்கு  இழுத்துச் சென்று துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.

யுவதி காட்­டுக்குள் இழுத்­துச்­செல்­லப்­பட்­டதை அறிந்த பிர­தே­ச­வா­சி­களும் பொலி­ஸாரும் காட்டில் தேடுதல் நடத்­தி­யுள்­ளனர். பினனர் சிறுமி வீடு வந்­துள்ளார்.

தன்னை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திக­தியும் சகோ­த­ரியின் கணவர் பாலியல்  துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். பொலிஸார் யுவ­தியை வைத்­திய பரி­சோ­த­னைக்­காக கம்­பு­று­பிட்­டிய வைத்தியசாலையில் சேர்த்ததுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது..!!
Next post இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு..!!