ஆர்ப்பாட்டக்காரர்களினால் துப்பாக்கி பிரயோகம்?-சபையில் அமைச்சர் நிமல்..!!
வெலிவேரிய சம்பவத்தின்போது, பாதுகாப்பு தரப்பினர் மீது ஆர்ப்பாட்டக்கார்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் பின்னரே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் ஏராளமான பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, வெலிவேரிய சம்பவத்தின் போது, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே. கம்பஹா – வெலிவேரிய – ரத்துபஸ்வல பிரதேச நீர் பிரச்சினை தொடர்பாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முதல் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பிரதேசத்தில் இருந்து மண் மாதிரிகள் எடுத்து வரப்பட்டதாகவும் அந்த பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating