வட, கிழக்கிலிருந்து இராணுவத்தை விலகச் சொல்வது ஏனென்று இப்போதாவது சிங்கள மக்கள் உணர வேண்டும்; மனோ கணேசன்-
Read Time:1 Minute, 28 Second
வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்தியிருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின்போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்குமென்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த கன்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது.
தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.
இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி என்ற கருத்துக்களை கேட்கும் போது என் உடம்பு புல்லரித்து மயிர்கூச்செறிகின்றது. என் நெஞ்சம் கனக்கின்றது.
என் கண்களில் கண்ணீர் தளும்புகின்றதென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Average Rating