நெஞ்சம் இரண்டாக பிளந்தநிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..!!
Read Time:44 Second
பதுளை – கொழும்பு ரயில் வீதியில் தெமோதர, பிங்கேய பகுதியில் மார்பு இரு துண்டுகளான நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெமோதர தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய நவராஜ் சசிகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating