மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய பிக்குக்கு அபராதம்..!!
மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய பௌத்த மத குருவிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர் தொம்பே பகுதியைச் சேர்ந்த விகாராதிபதி ஒருவரான இந்தொலேபஞ்சாரதன ஹிமி என்பவருக்காகும்.
மஹவ பிரதான மஜிஸ்திரேட் ருச்சினி ஜயவர்தன முன் விசாரணைக்கு எடுக்கப்பட் வழக்கில் பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது-
கடந்த 31ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மஹோதலதாகம என்ற இடத்தில் பொலிஸ் உத்தரவை மீறி வேகமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அச்சமயம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இருந்ததுடன் அதிக மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட மத குரு குற்றவாளியாகக் காணப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
Average Rating