துருக்கி முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆயுள்தண்டனை..!!
துருக்கியில் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய முன்னாள் இராணுவத் தளபதி இல்கர் பஸ்பக் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி கவிழ்க்க சதி தீட்டிய தலைமை தளபதி பஸ்பக், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட 275 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், முன்னாள் தலைமை தளபதி இல்கர் பஸ்பக்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தவிர மேலும் 253 பேருக்கும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இவர் தவிர நிருபர் துன்னே ஓஷிகள், சட்டத்தரணி லகமல் கெரிங்குஷ் உள்ளிட்டோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பத்திரிகையாளர் முஸ்தபா பல்டே மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
Average Rating