மரண வீட்டுக்குச் சென்ற பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை..!!
Read Time:1 Minute, 18 Second
மரண வீட்டுக்குச் சென்றிருந்த பெண்ணொருவர் அங்கு வைத்து மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அளவ்வ -கெபெல்லவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 62 வயதான
பெண்ணே உயிரிழந்தவராவார்.
மரண வீட்டுக்குச் சென்றிருந்த இந்தப் பெண்ணுக்கும் அங்கிருந்த நபரொருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையையடுத்தே குறித்த பெண் மீது மண்வெட்டியால் தலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் நேற்றுமாலை பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவிருந்தார். கொலையுண்டவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating