மணமகனாக நடித்து 10 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ‘மாப்பிள்ளை’ கைது..!!

Read Time:2 Minute, 33 Second

imagesபத்து இளம் பெண்­களை திரு­மணம் செய்­வ­தாக ஏமாற்றி அவர்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ததாக கூறப்­ப­டும் நபர் ஒரு­வரை கட்­டு­கஸ்­தோட் டைப் பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ள னர்.

பத்­தி­ரி­கைளில் போலிப் பெயரில் திரு­மண விளம்­பர சேவை மூலம் பெண்­க­ளுடன் தொடர்பு கொண்டு அவர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து அவர்­க­ளது உடை­மை­க­ளையும் கையா­டி­யுள்­ளமை தெரிய வந்­துள்­ளது. இவ்­வாறு சுமார் 20 இலட்ச ருபா­வுக்கு மேற்­பட்ட பணம், தங்க நகை போன்­ற­வற்றை மோசடி செய்­துள்­ளமை பற்றி தெரிய வந்­துள்­ளது.

மாத்­தளை அலு­வி­காரை பிர­தே­சத்தைச் சேர்ந்த திரு­ம­ண­மாண இரு பிள்­ளை­களின் தந்­தையே இவ்­வாறு மோசடி தொடர்பில் கைதா­கி­யுள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர். இந்த நபர் பத்­தி­ரிகை விள­ம­ப­ரங்கள் மூலம் வித­வை­க­ளையும், இளம் பெண்­க­ளையும் தமது வளையில் சிக்க வைத்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது.

அவர்­க­ளுக்கு ஆசை வார்த்­தை­களை காட்டி திரு­மணம் செய்­வ­தாகத் தெரி­வித்து தந்­தி­ர­மான முறையில் விடு­தி­க­ளுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதி­யான தொடர்­பு­களை ஏற்­ப­டு­த­திப்­பின்னர் அவர்­க­ளது தங்க நகை­க­ளையும் தந்­தி­ர­மாகப் பெற்று பின்னர் கைவிட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

கட்­டு­கஸ்­தோட்டைப் பொலிஸார் தேடிக்­கொண்­டி­ருந்த மேற்­படி சந்­தேக நபர் பெலி­யத்தைப் பகு­தியில் தலை­ம­றை­வாக இருந்­த­போது பெலி­யத்தை பொலி­ஸா­ருடன் கட்­டு­கஸ்­தோட்டைப் பொலி­ஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர். சந்தேக நபருக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிராண்ட்பாஸ் குடுராணி கைது..!!
Next post யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை வேறு எவரையும் விட அரசே கூடிய தடவை உச்சரித்துள்ளது; அரியநேத்திரன் எம்.பி…!