மணமகனாக நடித்து 10 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ‘மாப்பிள்ளை’ கைது..!!
பத்து இளம் பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கட்டுகஸ்தோட் டைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ள னர்.
பத்திரிகைளில் போலிப் பெயரில் திருமண விளம்பர சேவை மூலம் பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது உடைமைகளையும் கையாடியுள்ளமை தெரிய வந்துள்ளது. இவ்வாறு சுமார் 20 இலட்ச ருபாவுக்கு மேற்பட்ட பணம், தங்க நகை போன்றவற்றை மோசடி செய்துள்ளமை பற்றி தெரிய வந்துள்ளது.
மாத்தளை அலுவிகாரை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாண இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மோசடி தொடர்பில் கைதாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நபர் பத்திரிகை விளமபரங்கள் மூலம் விதவைகளையும், இளம் பெண்களையும் தமது வளையில் சிக்க வைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
அவர்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி திருமணம் செய்வதாகத் தெரிவித்து தந்திரமான முறையில் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியான தொடர்புகளை ஏற்படுததிப்பின்னர் அவர்களது தங்க நகைகளையும் தந்திரமாகப் பெற்று பின்னர் கைவிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தேடிக்கொண்டிருந்த மேற்படி சந்தேக நபர் பெலியத்தைப் பகுதியில் தலைமறைவாக இருந்தபோது பெலியத்தை பொலிஸாருடன் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர். சந்தேக நபருக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.
Average Rating