மத்­தள சர்­வ­தேச விமான நிலைய சேவை­யை விஸ்­த­ரிப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கை..!!

Read Time:2 Minute, 21 Second

download (8)மத்­தல மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு விமான சேவையை விஸ்­த­ரித்து பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க அரசு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது.

அம்­பாந்­தோட்டை – மத்­தல பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்குச் செல்லும் விமா­னங்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ளது.

இதனை கருத்­திற்­கொண்டு விமா­னங்கள் மற்றும் பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் நோக்கில் அர­சாங்கம் மத்­தல விமான நிலை­யத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமானக் கட்­ட­ணங்­களை குறைத்­துள்­ளது.

இதே­வேளை எமிரேட்ஸ், கல்ஃப் எயார் போன்ற வெளி­நாட்டு விமான சேவை நிறு­வ­னங்­களின் விமா­னங்­களை மத்­தல விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கவும் அங்கு நிறுத்­தி­வைப்­ப­தற்­கான கட்­ட­ணங்­க­ளையும் அர­சாங்கம் 50 சத­வீ­த­மாகக் குறைத்­துள்­ளது.

இதனைத் தவிர, விமா­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிவா­ரண காலமும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மார்ச் மாத தொடக்­கத்தில் வெளி­நாட்டு விமா­னங்­க­ளிடம் அற­வி­டப்­பட்ட கட்­ட­ணங்­களில் 50 வீதம் சலு­கை­ய­ளிக்­கப்­பட்­டது. இதற்­கி­ணங்க, இந்தக் கட்­டண சலு­கையை தொடர்ந்தும் வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­தல மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு வரும் விமா­னங்­களின் எண்­ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த விமான நிலையத்தை, விமானங்களை பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்திருந்தமையும் குறிப் பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை வேறு எவரையும் விட அரசே கூடிய தடவை உச்சரித்துள்ளது; அரியநேத்திரன் எம்.பி…!
Next post திருமண பதிவுக்கு தயாரான நிலையில் காதலன் தலைமறைவு; தற்கொலை முயற்சியில் யுவதி காயம்..!!