திருமண பதிவுக்கு தயாரான நிலையில் காதலன் தலைமறைவு; தற்கொலை முயற்சியில் யுவதி காயம்..!!

Read Time:1 Minute, 36 Second

images (4)திருமணத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தயார் செய்து கொண்டிருந்த போது காதலன் தலைமறைவானதால் கவலையடைந்த யுவதியொருவர் இ.போ.ச. பஸ்ஸின் முன்னால் பாய்ந்து  படுகாயமுற்று   பண்டாரவளை வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட சம்பவமொன்று கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவதினம் மாலை மூன்று மணியளவில் கெப்பிட்டிபொல  டிப்போவைச் சேர்ந்த இ.போ.ச. பஸ் வண்டி முன்னால் பாய்ந்து தற்கொலை  செய்து கொள்ள  முயற்சித்தவர் பண்டாரவளை பொரலந்தையைச் சேர்ந்த 23 வயது யுவதியாவார்.

யுவதி பொற்றோருடன் பண்டாரவளை நகரிலுள்ள திருமணப் பதிவாளர் முன்னால் திருமணத்தை பதிவு செய்வதற்கு தயாரான போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இளைஞரைத் தேடி நெடுநேரம் நகரில் தேடிய பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய சென்ற போதே யுவதி பஸ்ஸின் முன்னால் பாய்ந்துள்ளார். பஸ் சாரதியின் சாதுரியத்தால் யுவதி உயிரிழக்காமல் தப்பியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்­தள சர்­வ­தேச விமான நிலைய சேவை­யை விஸ்­த­ரிப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கை..!!
Next post தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!!