தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!!
போலி அடையாள அட்டையை சமர்ப்பித்து தங்கைக்காக க.பொ.த. உயர்தர பரீட்சையில் நடன பாடத்துக்கு தோற்றியதாக கூறப்படும் கொலன்ன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவரை எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிவான் தினேஷ் லக்மால் பெரேரா பிணையில் செல்ல அனுமதித்தார்.
எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய மகா வித்தியாலயத்தில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் நடன பாடத்துக்கு போலி அடையாள அட்டையை சமர்ப்பித்து தோற்றியது தொடர்பாக பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் எம்பிலிபிட்டிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டார்.
தங்கையின் அடையாள அட்டையிலுள்ள புகைப்படத்துக்கு மேல் அக்காவின் புகைப்படத்தை ஒட்டி லெமினேட் செய்து போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating