தனது காதல் மனைவியுடன் பொலிஸில் சரணடைந்த இலங்கை அகதி மாணவன்..!!
Read Time:1 Minute, 17 Second
பெற்றோரால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில் இலங்கை அகதி மாணவரும் கேரளாவைச் சேர்ந்த அவரின் காதல் மனைவியும் இராமேஸ்வரம் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
19 வயதான ஸ்டெபி எங்கெஸ் என்ற கேரள மாணவியும், 20 வயதான கஜேந்திரன் என்ற இலங்கை மாணவனுமே சரணடைந்தவர்களாவர்.
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் இருவரும் சமீபத்தில் பழனி முருகன் கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், குறித்த மாணவியின் தந்தையான இராணுவ அதிகாரி தமது மகளைக் காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து தமது பெற்றோரால் தங்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்திலேயே தாம் இருவரும் சரணடைந்ததாக கேரள மாணவி இராமேஸ்வரம் பெண் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
Average Rating