இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனத்தின் முதலாவது வெளிநாட்டு மின் உற்பத்தி நிலையம் சம்பூரில்..!!
இலங்கை மின்சார சபைடன் இணைந்து இலங்கையில் அனல் மின் நிலையமொன்றை இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனம் அமைக்கவுள்ளதாக இந்திய வலுசக்தி அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விடுத்த எழுத்துமூல அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அனல் சக்தி கூட்டுத்தாபனமானது (என்.ரி.பி.சி) இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும். இக்கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து ‘ட்ரின்கோமலீ பவர் கம்பனி லிமிடெட்’ என்ற நிறுவனமொன்றை 2011 ஆம் ஆண்டு ஸ்தாபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் அமையவுள்ள இம்மின்சக்தி நிலையம் 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகும்.
இந்திய அனல்சக்தி கூட்டுத்தாபனத்தினால் வெளிநாடொன்றில் அமைக்கப்படும் முதலாவது அனல் மின்சார உற்பத்தி நிலையம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating