வவுனியா பெண் லண்டனில் கொலை..!!
Read Time:1 Minute, 18 Second
வவுனியா தவசிக் குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி எனும் பெண் லண்டனில் இனந் தெரியாதோரால் கொலை செய்யப் பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
2010 ஆம் ஆண்டு மேற்படிப்பை மேற்கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த தனது மகள் அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்து வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக தந்தையான குணராசா தெரிவித்தார்.
இதேவேளை, ஒரு குழந்தைக்கு தாயான தனது மகள் கடந்த 6 ஆம் திகதி தான் வசித்து வந்த வீட்டில் வைத்து கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததுடன் தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Average Rating