கனடா சிறுவர்களை கொன்ற பாம்பு செல்லப்பிராணி கிடையாது..!!
கனடாவின் நேற New Brunswick- Campbellton எனும் இடத்தில் இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஆப்ரிக்க இன பாம்பு சட்டப்படி செல்லப்பிராணியாக வளர்க்க முடியாததென்றும் பதிவு செய்யப்படாததென்றும் தெரியவந்துள்ளது.
இத்தகவல் மாகாண அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. Noah Barthe (வயது 5) Connor Barthe (வயது 7) ஆகிய இரு சிறுவர்களும் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில்இ 4 மீற்றர் நீளமுள்ள ஆப்ரிக்க இனமான pலவாழn எனும் பாம்பு கடித்து இறந்தனர். இவர்களது மரணம் சம்பந்தமாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இத்தகவல் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாம்பினால் நெரித்து தான் இருவரும் கொல்லப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. பாம்பு கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. New Brunswick மாகாணத்தில் இத்தகைய உயிரினத்தை வைத்திருப்பதற்கு அனுமதியில்லை எனவும் கூறப்படுகின்றது.
Average Rating