சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது..!!
Read Time:1 Minute, 0 Second
சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் நகரில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் எடுத்து வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்தை அடைந்த பொழுது சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய கார்ட் போன்றவற்றையும் தாம் கைப்பற்றியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating