தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்..!!
Read Time:50 Second
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி தனியார் பஸ் கட்டணங்கள் பத்து வீதம் அதிகரிக்கப்படவுள்ளன. இந்நிலையில் ஆரம்ப பஸ் கட்டணம் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Average Rating