புல்மோட்டையில் தொடர் கொள்ளை: இருவர் கைது..!!
Read Time:1 Minute, 8 Second
கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த இருவர் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்மோட்டை, தென்வன் மரபு அடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் புல்மோட்டை பொலிஸில் முறைப்பாடுகளை செய்திருந்தனர்
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரனையின் போது இவர்கள் 65,000 ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரத்தினை திருடியுள்ளார்கள் என தெரிய வருகின்றது.
சந்தேக நபர்கள் புல்மோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating