3 மாதம் 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி மீட்பு..!!
அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான் காஸ்டன்க்வேய். அவருடைய மனைவி ஹான்னா.
அவர்களுக்கு அர்தித் என்ற 3 வயது மகளும், ரஹப் என்ற குழந்தையும் உள்ளது. மத நம்பிக்கை மிக்க அந்த குடும்பத்திற்கு அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்றுக் கொள்வது, கருக்கலைப்பை ஏற்றுக்கொள்வது போன்றவை பிடிக்கவில்லை.
இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி அங்கிருந்து 3,300 மைல் தொலைவில் உள்ள சிறிய தீவு நாடான கிரிபாட்டிக்கு செல்ல தீர்மானித்தனர்.
அதன்படி அவர்கள் கடந்த மே மாதம் சான் டீகோவில் இருந்து சிறிய படகில் கிரிபாட்டிக்கு கிளம்பினர். அவர்கள் கிளம்பிய நேரத்தில் புயல் அடித்து அவர்களின் படகு படாதபாடுபட்டது.
படகை மேலும் செலுத்த முடியாமல் அவர்கள் மாதக் கணக்கில் கடலிலேயே தவித்தனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அந்த வழியாக சென்ற விமானம் ஒன்று அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள சிலி நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இறக்கிவிட்டது.
அவர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளது.
Average Rating